கொரோனா தொற்று காரணமாக கட்டாரில் உள்ள இலங்கை தூதரகம் 14 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கட்டாரில் உள்ள இலங்கைத் தூதரகம் நேற்று (செப்-22) முதல் இரண்டு வாரங்களுக்கு (ஒக்-5 வரை) மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டாரில் உள்ள இலங்கையர்கள், தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலமாக அலுவலகத்துடன் தொடர்புகளை ஏற்படுத்த முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா தொற்று காரணமாக சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் கொன்சியூலர் அலுவலகமும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, உலகம்